Connect with us
Fans are shocked by the punishment given by ICC for improper bowling of Jadeja Fans are shocked by the punishment given by ICC for improper bowling of Jadeja

Cricket news

முறைகேடாக பந்து வீசிய ஜடேஜா ! ஐசிசி அளித்த தண்டனை அதிர்ச்சியில் ரசிகர்கள் !

Published

on

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

மூன்றாவது நாளாக நடைபெறும் இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி திக்கி தடுமாறி 91 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குறிப்பாக ரவீந்திர ஜடேஜா இரண்டு விக்கெட்கள் இரண்டாவது இன்னிங்ஸில் வீழ்த்தினார்.

தற்பொழுது பகீர் குற்றச்சாட்டு ரவீந்திர ஜடஜாவின் மீது நடுவர்கள் எழுப்பி உள்ளனர். ஜடேஜா பந்து வீசும் முன்பு கையில் ஏதோ ரசாயனம் தடவிய தாகவும் கே.எல்.ராகுல் அந்த ரசாயனத்தை ரவீந்திர ஜடேஜாவுக்கு கொடுத்ததாக ஆதாரபூர்வமாக கூறப்படுகிறது.

Ravindra Jadeja 25 percentage penalty
Ravindra Jadeja 25 percentage penalty

மேலும் ரவீந்திர ஜடேஜா நேற்று பேட்டி அளித்த போது கை விரலில் காயம் இருப்பதாகவும் வலி ஏற்படாமல் இருக்க அவ்வப்போது ரசாயனம் கலந்த மருந்து பயன்படுத்தியதாகவும் அதனால் தான் நான் பந்து வீச சில நிமிடங்கள் அதிகமாகவே எடுத்துக் கொள்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

நடுவர்கள் ஐசிசி க்கு புகார் ஒன்று அனுப்பி உள்ளனர். அதில் ரவீந்திர ஜடேஜா எந்த ஒரு அறிவிப்பும் இன்றி கையில் ரசாயனம் பூசிதாகவும் இதுபோன்று ஏதாவது கையில் காயம் காரணமாக மருந்து பயன்படுத்தினால் அந்த மருந்தை நடுவரிடம் கொடுத்து ஒப்புதல் பெற்ற பின்னரே பயன்படுத்த வேண்டும் என்று புகார் அனுப்பியுள்ளனர்.

இதற்கு ஐசிசி ரவீந்திர ஜடஜாவின் சம்பள பணத்திலிருந்து 25% அபராதம் செலுத்த வேண்டும் என்று நேரடியாக கூறியுள்ளனர் இந்தியா அணி முதல் இன்னிங்ஸில் வெற்றி பெற்ற மகிழ்ச்சி ஒரு பக்கம் இருப்பினும் இந்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 Comment

1 Comment

  1. Pingback: பார்டர் கவாஸ்கர் தொடரிலிருந்து ஜெய்தேவ் உனட்கட் நீக்கம் காரணம் என்ன ? - News crowns

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending